ஏவுகணை எச்சரிக்கை கோள் விண்ணில் செலுத்தியது அமெரிக்கா ஈரானைத் தாக்கினால் இஸ்ரேலிய நகரங்களை அழிப்போம் |
ஏவுகணை எச்சரிக்கை செயற்கை கோள் விண்ணில் செலுத்தியது அமெரிக்கா
உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும், அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை, அமெரிக்கா,விண்ணில் செலுத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வல்லரசு நாடுகளும், வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளன. அவற்றை எப்போது ஏவினாலும், அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை அமெரிக்கா தயாரித்தது. அமெரிக்காவின், புளோரிடா பகுதியிலுள்ள கேப் கெனவரெல் ஏவுதளத்தில் இருந்து, "ஜியோ-2' என, பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், "அட்லஸ்-5' ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட்டது. அகசிவப்பு கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த செயற்கைக்கோள், உலகின் எந்த பகுதியில் இருந்தும்,எதிரி நாட்டு மீது ஏவுகணை ஏவப்பட்டால், உடனடியாக அது குறித்து, அமெரிக்காவுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும். ஏற்கனவே, "ஜியோ-1' என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வெற்றிகரமாக செயல்படவில்லை என்றாலும், 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளது. ஈரானைத் தாக்கினால் இஸ்ரேலிய நகரங்களை அழிப்போம் - அயதொல்லா காமேனி
அணுஆயுத நடவடிக்கைகளை கைவிடாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. இந்நிலையில் ஈரான் மதத்தலைவர் அயதொல்லா காமேனி துபாயில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை தரைமட்டமாக்குவோம்.
கடந்த சில வருடங்களாகவே ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்து பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளன. துடிப்பு மிக்க ஈரானை எந்த ஒரு நாடும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது.
ஈரான் குடிமக்களின் பயன்பாட்டிற்காகவே அணு ஆயுத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: