பாக்–ஈரான் கியாஸ் குழாய் திட்டத்தை யாரும் தடுக்க முடியாது அமெரிக்காவுக்கு சர்தாரி பதில்
லாகூர்,
பாகிஸ்தான், ஈரான் நாடுகள் இடையே ரூ.37ஆயிரம் கோடி செலவில் கியாஸ் குழாய் அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான தொடக்க விழா வருகிற 11–ந்தேதி நடக்கிறது. இதற்கிடையில் இத்திட்டத்தை நிறைவேற்றினால் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என கடந்த வாரம் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி லாகூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், ‘இத்திட்டத்தை தடுத்து நிறுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. பாகிஸ்தானின் எதிர்கால எரிசக்தி தேவையை கருதி தேசிய நலன் அக்கறையுடனேயே இந்த ஒப்பந்தத்தை செய்தோம். எங்களுக்கு இத்திட்டத்தை நிறைவேற்ற உரிமை இருக்கிறது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை சுமுகமாக பேசி தீர்க்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
0 comments: