Facebook Twitter RSS


அப்ஸல் குருவின் உடலை ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!



கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் பாராளுமன்ற தாக்குதலில் அநியாயமாக தூக்கிலிட்டு கொல்லப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்ஸல் குருவின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கஷ்மீரில் கோரிக்கை வலுத்து வருகிறது.
அப்ஸல் குருவை தூக்கிலிடுவதற்கு முன்பு அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்படவில்லை. தூக்கிலிட்டு கொல்லப்படுவதற்கு முன்பாக அவரது குடும்பத்தினரை பார்க்கவும் அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கஷ்மீரில் கொந்தளிப்பு உருவாக்கும் என்ற காரணம் கூறி அவரது உடலையும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுத்து வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் அப்ஸல் குருவின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி பொது நல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மரணத்தண்டனையை அமல்படுத்தும் போது உறவினர்களுக்கு உடலை ஒப்படைக்கும் விவகாரத்தில் தெளிவான கொள்கையை வகுக்கவேண்டும் என்றும் அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்ஸல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வரை கஷ்மீரில் போராட்டம் தொடரும் என்று தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் கட்சியின் தலைவர் செய்யத் அலி ஷா கிலானி அறிவித்துள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: