ஜேர்மனி படைவீரர்களை மாலிக்கு அனுப்ப ஒப்புதல் |
இஸ்லாமிய போராளிகளை அப்புறப்படுத்த மாலிக்கு சென்ற பிரெஞ்சு ராணுவம் வலுவிழந்து காணப்படுவதால் அவற்றிக்கு உதவி புரியும் நோக்கத்தில் ஜேர்மனி அரசு தங்களுடைய 330 படைவீரர்களை மாலிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனி வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சக ஒப்புதலின் படி ஐரோப்பிய ஆணைய ஒன்றியத்திற்காக 180 படைவீரர்களை மாலிக்கு அனுப்புகிறார்கள்.
இதை தொடர்ந்து 40 படைவீரர்கள் மாலி படையில் பயிற்சி கொடுப்பதற்காகவும், அடுத்த 40 படைவீரா்கள் மருத்துவ உதவிக்கும், 150 படைவீரா்கள் தண்ணீர், சரக்கு போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்திற்காகவும் அனுப்பபடுகிறார்கள்.
மேலும் 100 படைவீரர்கள் வான்வெளி போக்குவரத்தின் பின்னால் இருந்து உதவிகள் செய்ய அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் போர் புரிவதற்காக அல்ல என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜேர்மனி முன்னரே இரண்டு டிரான்சேல்(Transall) ஆகாய விமானங்களை பிரெஞ்சுக்காக அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: