ஆப்கானிஸ்தானில் போராளிகளின் தாக்குதலில் 11 போலீஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் பலி |
ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்தியக் கிழக்கில் அமைந்துள்ள காஸினி மாகாணம், தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போராளிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு நேற்று போலீசார் தங்கியிருந்த இடத்திற்குள் மறைமுகமாக உட்புகுந்த தலிபான் போராளிகள், அங்கிருந்தோருக்கு மயக்கமருந்து கொடுத்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் மயங்கிய வேளையில், அனைவரையும் போராளிகள் சுட்டுக்கொன்ற பின்னர் தப்பிச்சென்றுள்ளனர். இதில் 11 போலீசார் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அங்கு வந்த காவலர்கள், சடலத்தை மீட்டு, கவனக்குறைவாக இருந்த காவலர்கள் இருவரை கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: