காஸியாபாத் மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு!ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைவரிசையா?...
காஸியாபாத்திற்கு அருகில் உள்ள தஸ்னாவில் உள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதில் திங்கள் கிழமை இரவு 10:20க்கு குண்டுவெடித்தது. குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வெடிப்பிற்கான காரணம் தெரியவரவில்லை. எனினும், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சதித்திட்டங்கள் வெளியாகி தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல தீவிரவாதிகள் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் காஸியாபாத் அருகே உள்ள மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கரங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குண்டு வெடிப்பில் அருகில் உள்ள வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரசாயனப்பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்ட் ரண்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.