2014க்குப் அமெரிக்கா ராணுவம் தொடர்ந்தும் ஆப்கானில் நிறுத்தப்பட்டால்....: தலிபான்கள் எச்சரிக்கை
காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைகொண்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஒட்டுமொத்தமாக 2014க்குள் வெளியேறியாக வேண்டும். அதன்பின் ஒரு அமெரிக்க ராணுவ வீரர்கூட ஆப்கானிஸ்தானில் இருக்கக் கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் 2014-ம் ஆண்டுக்குள் வெளியேறிவிடும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிலான அமெரிக்கா ராணுவத்தினர் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் அடுத்த வாரம் இது தொடர்பாக ஒபாமாவுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஹர்சாய் விவாதிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கூட ஆப்கானிஸ்தான் மண்ணில் இருக்கக் கூடாது. அமெரிக்கா ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்க ஹர்சாய் அரசு ஒப்புக் கொள்ளக் கூடாது. அதை மீறி ஆப்கானிஸ்தானில் நிலை கொள்ளும் அமெரிக்கா ராணுவத்தினர் எதிர்கொள்ளப் போகும் அழிவுகளுக்கு ஹர்சாய் அரசே பொறுப்பு என்று போர் பிரகடனம் அறிவித்திருக்கின்றனர்.
0 comments: