Facebook Twitter RSS


நேட்டோ வான் தாக்குதலில் ஆப்கானிய "சிறார் பத்து பேர் பலி"


ஆப்கானிஸ்தான் வரைபடத்தில் குனார்
ஆப்கானிஸ்தான் வரைபடத்தில் குனார்
ஆப்கானிஸ்தானின் வடக்கிலுள்ள குனார் மாகாணத்தில் நேட்டோ சர்வதேச படைகள் மூன்று கிராமங்களில் நடத்திய வான் தாக்குதலில் சிறார்கள் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அம்மாகாண கிராமவாசிகளும் அதிகாரிகளும் கூறுகின்றனர்.
பிள்ளைகள் வாழ்ந்துவந்த வீடுகளின் மேல் குண்டு விழுந்து மேற்கூரை இடிந்து விழுந்ததில் இவர்கள் உயிரிழந்தனர் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே நடந்துள்ள இந்தத் தாக்குதலில் பெண்கள் இருவரும், கிளர்ச்சிக்காரர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நேட்டோ தாக்குதல் நடவடிக்கையில் சாதாரண பொதுமக்கள் யாரும் கொல்லப்பட்டதாக தமக்கு தகவல் இல்லையென்றும், விசாரணை செய்யப்படுவதாகவும் சர்வதேச கூட்டணியான ஐ எஸ் ஏ எஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுக்கும் ஆப்கானிய அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலையின் முக்கியக் காரணமாக நேட்டோ தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுகின்ற விவகாரம் இருந்துவருகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: