Facebook Twitter RSS
*/

Latest News

சிரிய உள்நாட்டு போரின் கோர வர்ணங்கள் (மனதை பிசையும் இமேஜ்கள்)

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரின்  வன்முகங்கள்  கொண்ட பல போட்டோக்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன. உயிர்ப்புமிகு இந்த போட்டோக்களில் இருந்து நீங்களும் அதன்
அருகில் இருப்பதைப்போல் உணர்வீர்கள்..
தாய் மண்ணை விட்டு பிரிவதில் தான் எத்தனை வருத்தம்.....
இராணுவ டாங்கியின் தாக்குதலின் பின்னரான நொடிப்பொழுதுகளில்....
எல்லை கடக்கும் சிரியர்கள் பொஸ்னிய ஞாபகங்களை மீட்டுகின்றனர்...
மரண பயத்தை இவர்கள் கண்களில் காணலாம் - எப்.எஸ்.ஏ. போராளிகளிடம் அகப்பட்ட சியாக்கள்.
கலஸ்னிகோவ்ஃ சுமக்கும் சிரிய சிறுவன்...................
பஸர் அல்-அஸாத்திற்காக படுகொலை செய்யும் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பாஹித் ஜெசீம் அல் பெரட்...
யுத்தத்தின் இன்னொரு பிம்பம்....
மோட்டார் செல் வெடித்த சில கணங்களின் பின்....
துருக்கி நோக்கி எல்லை கடக்கும் சரிய குடும்பம்..

இழந்த தந்தையை வேண்டி நிற்கும் சிறுவன்
சண்டைக்களத்தில் உதிர்ந்த பூக்கள்.....
குண்டு தாக்குதல் நிகழ்ந்து சில நிமிடங்களின் பின்... ஒரு தாயின் ஓலம்...
அதிரும் அலிபோ.... சிரிய படைகளை எதிர்த்து சண்டையிடும் கணப்பொழுதுகளில்....
துருக்கியினுள் எல்லை கடக்கும் சிரியர்கள்..
இது ஹோம்ஸின் காட்சி........
சிரிய படையினரை நோக்கி வெடிகுண்டை வீசும் போராளி
சிரிய படையினர் ஏவிய வெடிக்காது வீதியில் புதைந்துள்ள ஆட்டிலறி செல்
பாணிற்காக வரிசையில் நிற்கும் சிரிய பெண்கள்
பாழைடைந்த தேசமாகிப்  போன சிரியா.......

துருக்கிய எல்லையில் உள்ள பிப் சலாம் அகதி முகாமில் வாழும் சிரிய குழந்தை

சிரிய களத்தில் எடுக்கப்பட்ட உயிர்ப்புமிகு காட்சிகள்...

காட்சிகள் ஒழுங்கில் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றை உங்கள் மன்திரையில் ஒழுங்கு படுத்தி பாருங்கள். ஒரு சில நிமிட சண்டைக்காட்சி உங்கள் முன் எழுந்து நிற்கும்
சிரிய படையினரின் சினைப்பர் தாக்குதலில் ஒரு போராளி காணம் அடைந்த கணத்தில்....
இரண்டு போராளிகள் டமாரா சண்டை களத்தில் கவர் எடுத்து மூவ் பண்ண காத்திருக்கின்றனர்
சிரிய படையினரின் டாங்கியில் இருந்து வந்து வெடிக்கும் செல்லின் கணப்பொழுதில்.....

மரணித்த சகாவை இழுத்துச் செல்கையில்.....
தாக்குதல் நடத்திய டாங்கி மீது ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் நடாத்தப்படும் கணப்பொழுதில்....

டாங்கியின் தாக்குதலின் பின்னர் தப்பியோடும் போராளிகள்
டாங்கியை அழிக்கப்பட்டுவிட்டது என சகாக்களிற்கு அழைப்பு விடுக்கும் போராளி...

எதிரிகள் தாக்கியழிக்கப்பட்டு மீண்டும் களத்தில் உயிருடன் மீதமுள்ள சகாக்களை கண்டு ஆனந்த கண்ணீர்மல்கும் போராளிகள்

சி.ஐ.ஏ. டி-கிளாசிபைடு ரகசியம்: பண்ணை வீட்டில் அல்-ஸவாகியின் கடைசி டின்னர் பார்ட்டி!

மெரிக்க உளவுத்துறை செய்த பல ரகசிய ஆபரேஷன்கள் பற்றிய தகவல்கள், அந்த ஆபரேஷன்கள் முடிந்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு ரகசியமாகவே வைத்திருக்கப்படும். இப்படியான ரகசிய ஆவணங்களை, classified documents என்பார்கள். காலப்போக்கில் (சில ஆண்டுகளின் பின்) சில ஆவணங்களின் ரகசியங்கள் விலக்கப்படும். அதை Declassification என்பார்கள்.

இப்படியான ‘முன்னாள் ரகசியங்கள்’ அடங்கிய ஆவணங்களை, அமெரிக்காவின் தகவல் அறியும் சட்டப்படி, அமெரிக்கப் பிரஜை ஒருவர் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். அநேக மீடியாக்கள், எந்த ரகசியங்கள் டிகிளாசிஃபை பண்ணப்படுகின்றன என கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்து, உடனே விண்ணப்பிப்பார்கள்.

அப்படி Declassification செய்யப்பட்ட ஆவணங்களில் ஒன்று, அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்தபோது, அப்போதைய ஈராக்கிய அல்-கய்தா தலைவர் அல்-ஸவாகி எப்படி கொல்லப்பட்டார் என்பது.

Declassification செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில் இருந்து, அந்த ஆபரேஷன் எப்படி நடைபெற்றது என்று இப்போது முழுமையான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவையும் சுவாரசியமாக இருக்கின்றன.
பண்ணை வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே, விமானம் மூலம் குண்டு வீசப்பட்டு அல்-ஸவாகியும் வேறு சிலரும் கொல்லப்பட்டனர். குண்டு போடப்பட்ட பண்ணை வீட்டுக்கு அல்-ஸவாகி சென்ற காரணம், ஒரு டின்னர் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக. ஈராக்கிய தலைநகர் பாக்தாத்திலிருந்து சுமார் 60 கி.மீ. வடக்கே அமைந்திருந்த பண்ணை வீடு அது.

அந்த இரவு விருந்தில் கலந்து கொண்டவர்கள், அல்-ஸவாகியுடன், மூன்று பெண்களும் மூன்று ஆண்களும்.

ஆண்களில் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒருவர். இவர்தான் அல்-ஸவாகியின் மத ஆலோசகர். அவரை விட மற்றொரு முக்கிய நபரும் விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவர், அல்-ஸவாகியின் நம்பிக்கைக்குரிய கூரியர். இவர் மூலமாகவே அல்-ஸவாகி தகவல்களை மற்றையவர்களுக்கு அனுப்புவது வழக்கம்.

சி.ஐ.ஏ. அல்-கய்தா தலைவர்களை தகவல் தொழில்நுட்பத்தை வைத்து உளவு பார்ப்பது தெரிய வந்தவுடன், பின்லேடன் உட்பட அல்-கய்தா முக்கியஸ்தர்கள் அனைவருமே செல்போன்களையோ, இமெயில்களையோ உபயோகிப்பதை நிறுத்தி விட்டனர். மாறாக, நம்பிக்கைக்குரிய தகவல் அனுப்புனர்களாக கூரியர்களை உபயோகிக்க தொடங்கினர்.
(பின்னாட்களில் அல்-காய்தா தலைவர் பின்லேடனின் கூரியர் ஒருவரை கண்காணித்து, அவர் மூலமாகவே பின்லேடனின் ரகசிய இருப்பிடத்தை அறிந்து அவரை கொன்றது சி.ஐ.ஏ.)

அல்-காய்தாவின் ஈராக்கிய பிரிவுக்கு தலைவராக இருந்த அல்-ஸவாகிக்கு நம்பிக்கைக்குரிய சில கூரியர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலமாகத்தான் அல்-ஸவாகியின் உத்தரவுகள், ஆராக்கின் பல பகுதிகளிலும் இருந்த மற்றய தளபதிகளுக்கு போய்ச் சேர்ந்து கொண்டிருந்தன.

செல்போன் உரையாடல்களை அமெரிக்கர்கள் ஒட்டுக் கேட்பார்கள் என்று தெரிந்து கொண்டு, உஷாராக கூரியர்களை பயன்படுத்திய அல்-ஸவாகிக்கு மற்றொரு விஷயம் தெரிந்திருக்கவில்லை.
அது-

அல்-ஸவாகி பயன்படுத்திய கூரியர் ஒருவரை உளவுத்துறைகள் ட்ரக் டவுன் பண்ணிவிட்டார்கள் என்ற விஷயம்.

‘உளவுத்துறைகள்’ என பன்மையில் எழுதுவதன் காரணம், அமெரிக்க உளவுத்துறையுடன், ஜோர்தானிய உளவுத்துறையும் இணைந்தே அல்-ஸவாகியின் கூரியரை ட்ராக்-டவுன் பண்ணியிருந்தன.

இந்த நபரைப் பற்றிய விபரம் முதலில் ஜோர்தானிய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. அதன்பின் பல வாரங்களாகவே ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று தங்களுக்குள் சங்கேத மொழியில் கூறிக் கொண்டிருந்தார்கள். மிஸ்டர் எக்ஸின் நடமாட்டங்கள் மீதும் கண் வைக்கத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே அல்-ஸவாகியின் மத ஆலோசகர் அப்துல் ரஹ்மான் இவர்களது கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தாலும், அவர் அல்-ஸவாகியைச் சந்தித்ததாக தெரியவில்லை.

இதற்கிடையே மிஸ்டர் எக்ஸ், ஜோர்தானிய உளவுத்துறையின் கண்பார்வையில் இருந்து திடீரென மறைந்து போனார். அவர் ஈராக்கை விட்டு வெளியேறியிருக்கலாம் என  நினைத்த ஜோர்தானிய உளவுத்துறை, அவரை ட்ராக் பண்ண சி.ஐ.ஏ.வின் உதவியை நாடியது. மிஸ்டர் எக்ஸ் தொடர்பான விபரங்கள் அனைத்தும் சி.ஐ.ஏ.வுக்கு போய் சேர்ந்தன.
இதற்கிடையே, மிஸ்டர் எக்ஸ் ஈராக்கை விட்டு வெளியேறவில்லை என்றும், பாக்தாத்துக்கு 60 கி.மீ. வடக்கேயுள்ள பண்ணைவீடு ஒன்றில் தென்படுகிறார் என்றும் ஜோர்டானிய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. ஏற்கனவே மிஸ்டர் எக்ஸ் பற்றிய தகவல்கள் சி.ஐ.ஏ.வுக்கு பாஸ் செய்யப் பட்டுவிட்டதால், இந்த பண்ணை வீடு பற்றிய தகவலும் கொடுக்கப்பட்டது.

அதன்பின், விவகாரத்தை முழுமையாக தமது கைகளில் எடுத்துக் கொண்டது சி.ஐ.ஏ. ஜோர்தானிய உளவுத்துறை ஒதுங்கிக் கொண்டது.
உடனே அந்த இடம் கண்காணிக்கப்பட வேண்டிய இடமாகிவிட்டது. அல்-ஸவாகி தனது கடைசி தினத்தில் அங்கே செல்வதற்கு முன்னரே அமெரிக்க ராணுவத்தின் ரேஞ்சர்கள் பண்ணை வீட்டைச் சூழவுள்ள அடர்த்தியான மரங்களில், நாள் கணக்கில் மறைந்து இருந்திருக்கிறார்கள்.
மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களுக்கும் மையக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு நாள் இரவிலும் பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்தவர்கள் மாறி, புதிய ஆட்கள் வந்து மறைந்திருக்கிறார்கள்.

பண்ணை வீட்டுக்கு மிஸ்டர் எக்ஸ் வந்து போய்க்கொண்டிருந்தார். ஆனால், அல்-ஸவாகி அந்தப் பக்கமே தென்படவில்லை. இருப்பினும், ராணுவ ரேஞ்சர்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தது சி.ஐ.ஏ.
இந்த நிலையில் திடீரென ஒருநாள் அடுத்த தகவல், மற்றொரு சோர்ஸிடம் இருந்து சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது – மிஸ்டர் எக்ஸ் நடமாடிய பண்ணை வீட்டுப் பகுதியை நோக்கி, அப்துல் ரஹ்மான் செல்கிறார் என்பதே அந்த தகவல்.

உடனடியாக இந்தத் தகவல் பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மிஸ்டர் எக்ஸ் ஒரு பண்ணை வீட்டில் அடிக்கடி தென்படுகிறார். அதன்பின் ஒருநாள் அப்துல் ரஹ்மானும் அதே பண்ணை வீட்டை நோக்கிச் செல்கிறார் என்றவுடன், அல்-ஸவாகி அந்த பண்ணை வீட்டுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்று சி.ஐ.ஏ. புரிந்து கொண்டது. (அடுத்த பாகத்தில் நிறைவுபெறும். நாளை காலை 0700 மணி GMTக்கு அப்டேட் செய்யப்படும்)

அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை - ஒரு பார்வை


     
  ரு அகீதாவின் நிலைப்பிற்கும் அதன் வாழ்வியல் பிரயோகத்திற்கும் ,அதன் கட்டமைபின் பாதுகாப்பிற்கும் அதிகாரம் பொருந்திய நிலை என்பது மிகப் பிரதானமானது .எனவேதான் உலகின் ஒவ்வொரு அகீதாவும் தனது செயற்பாடுகளில் அதிகாரத்தை நோக்கிய நகர்வுகளை பிரதானப் படுத்தியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது 
.அதிகாரத்தை வெளிப்படையாக புறக்கணிக்கக் கூடிய வெறுக்கக் கூடிய மதங்களை பொறுத்த மட்டிலும் தனது நிலைப்பிட்காகவும் வளர்ச்சிக்காகவும் புறநடையாக அதிகாரம் நோக்கிய நகர்வுகளை அல்லது ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள சக்தியின் மீது சார்பு நிலைக் கோட்பாட்டையும் கொண்டனவாக இருக்கின்றது . அல்லது சமரசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு உடன்பாட்டையாவது ஏற்படுத்தி விடுகின்றன .

       கிறிஸ்தவம் துறவறம் பற்றியும் உலகை சம்பூர்ணமாக வெறுக்கும் மனப்பாங்கையும் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும் இத்தகு அடிப்படைக்கு மாற்றமாக 'சர்ச்சுகளின்' அதிகார ஆளுமையின் கீழ் மனித சமூகத்தை ஒரு நீண்ட நெடிய காலம் ஆதிக்கம் செய்தது . பின்னர் அறிவியல் ரீதியான அதன் தவறான பார்வை காரணமாக அதன் அதிகார ஆதிக்கம் அரசியல் வேறு மதம் வேறு என்ற அடிப்படையில் பிரிக்கப் பட்டது .

       இந்த சமரசம் 'சர்சுகளோடு' தனிமனித விருப்புகளோடு மதத்தை மட்டுப் படுத்தினாலும் அதிகார அரசியலின் கீழ் தங்கிவாழும் நிலை மட்டும் அரசியலில் அதன் உள்ளார்ந்த செல்வாக்கு என்பன சற்றும் குறையவில்லை .இன்று கூட அரச சார்பற்ற எனற பெயரோடு அரசுக்குள் ஒரு அரசாக நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி உலகளாவிய ரீதியில் இன்று கூட அமெரிக்க ஐரோப்பிய கூட்டுத் தலைமையில் 'முனிவர் நண்டும் கடல் அணிமணியும் போல ' தொழில் பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது .


  இதே போல பௌத்த சிந்தனையை பொறுத்தவரை உலகில் அருகி வரக்கூடிய ஒரு மதமாக காணப்படுவதனால் பேரினவாத அரசை சார்ந்து தன்னை தக்க வைக்கும் பாதுகாப்பு வேலியாகவும் அதற்கு பிரதி உபகாரமாக முதலாளித்துவ கவர்ச்சி அரசியலின் விளம்பர சாதனமாகவும் மாறி நிற்பதை இன்று எம்மால் அவதானிக்க முடியும் .

வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் பௌத்த மத வரலாற்றில் இந்தியாவின் அசோக மன்னன் பௌத்த மதத்தை தழுவியதன் பின்னர் தான் மிக வேகமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டதை அவதானிக்க முடியும் .இலங்கையை பொருத்தமட்டில் அனுராதபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் எனும் அரசன் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டதில் இருந்துதான் அம்மதத்தின் பொற்காலம் இலங்கையில் ஆரம்பமானது . ஆனால் அடிப்படையில் பௌத்த மதம் துறவறத்தையே வாழ்வியலாக பணிக்கிறது .

மேலும் அண்மைய உதாரணமாக ஆள் வளத்தில் குறைந்த யூத சமூகம் தனது சியோனிஸ தேசத்தை நிறுவுவதற்கும் ,பாதுகாப்பதற்கும் ,விஸ்தரிப்பதட்கும் கிறிஸ்தவ ஐரோப்பிய ,அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திட்டமிட்டு பயன்படுத்தியதையும் , இன்றும் பயன் படுத்தி வருவதையும் அவதானிக்கும் போது அரசியல் அதிகாரம் என்பது மனித சமூகத்தின் இராஜ தந்திர இலக்காகவும் ,இலக்கு நோக்கிய இராஜ தந்திரமாகவும் மனித வாழ்வியலோடு பிரிக்க முடியாமல்( வடிவத்தால் சரியாக அல்லது பிழையாக இருப்பினும் )அமைந்துள்ளது . அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை பற்றிய தெளிவு மிக அவசியமாகும் .

அதிகாரம் ,இறையாண்மை பற்றிய தெளிவின்மையில் இருந்து அரசு ,அரசியல் பிறக்கும் போது அனேகமாக அது சுயநலம் மிக்க சர்வாதிகாரமாக மாறிவிடும் .இன்று உலகில் ஏற்பட்டுள்ளது அத்தகு நிலைதான் ஆகும் .வாழ்வியலுக்கான வழிகாட்டலை ,சட்ட திட்டங்களை ,வரையறைகளை யார் தீர்மானிப்பது? என்பதே இங்கு இறையாண்மையாகும் .அந்த வகையில் அதிகாரத்துக்கான எல்லையையும் இறையாண்மை வரைவிலக்கணப் படுத்தும் .அதாவது அதிகாரத்தால் இறையாண்மையை கட்டுப்படுத்த முடியாது ஆனால் இறையாண்மை அதிகாரத்தை எல்லைப்படுத்தி கட்டுப்படுத்தும் . 

இறையாண்மை என்பது உண்மையில் இறைவவனின் பண்புக்கூருகளில் சிலதையோ பலதையோ ஒரு மனிதனுக்கோ ,ஒரு சடத்துவ பொருளுக்கோ ,வேறு எதற்கோ இருப்பதாக கருதுவதே ஆகும் . அந்த வகையில் ஒரு தேசத்தின் தேசியத்தின் விசுவாசியாக மாறுவதென்பது கூட இறைவனின் இயற்கையான ஒரு படைப்பினை வழிபடுவதாகும் . 
இயற்கையை கட்டுப்படுத்தும் வலிமை யாரிடம் உள்ளது ? என்ற கேள்வியின் பதிலில் இருந்தே இறைமைக்கான உரிமை புரிந்து கொள்ளப்பட வேண்டும் . அது மனிதனால் முடியாது என்ற தெளிவான விடை மனித மனித மனங்களில் தெளிவான பதிவில் உள்ளதால் அதை மறைத்து மூடவே இறையாண்மை என்ற சொற்பதம் பயன் படுத்தப் படுகின்றது . இன்னும் சற்று தெளிவாக சொன்னால் இறைவனின் உரிமையில் (ஒன்றிலோ ,பலதிலோ )உரிமை கொண்டாடுவது ஆகும் .இத்தகு தவறான அதிகார அரசியலே இன்று முழு உலகிலும் இருக்கின்றது . 
இன்று எந்த ஒரு ஜனாதிபதியோ ,பாராளுமன்றமோ , மன்னனோ' பிர் அவ்னைப்போல ' நானே இறைவனை விட பெரிய இறைவன் என்று சொல்லப்போவதில்லை .மாறாக இறைவனின் அதிகார ஆதிக்க எல்லையை சில சொல்லாடல்கள் ,பதங்களை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்துவார்கள் . அத்தகு வடிவத்தில் ஒன்றே மக்களால் ,மக்களுக்கு, மக்களுக்காக எனும் ஜனநாயக சிந்தனையாகும். இது ஒரு தவறான அரசியல் வடிவமாக இருந்தாலும் இன்று மனிதன் தனது மேற்போக்கான பார்வையில் அதை ஒரு உயர்ந்த சிந்தனையாக கருதுகிறான் .


இங்கு இறையாண்மை ,அதிகாரம் என்பன முற்று முழுதாக மனிதக் கரங்களில் வந்தடைகிறது . எனவே முஸ்லிமே ! உனது அரசியல் பார்வை இந்த 'ரித்தத் 'நோக்கிய அழைப்பில் இருந்து தொடங்கி விடக் கூடாது . இஸ்லாத்தின் அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை பற்றிய பார்வை முற்றிலும் வித்தியாசமானது . (அது பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .) இந்த நரக நெருப்பில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் .

 Source: khandaqkalam.blogspot.com

சிரியாவில் மேலும் மேலும் ஒரு இனிப்பான நற்செய்தி.............

சிரியாவின் போராளி அமைப்புகளில் ஒன்றானா Free Syrian Army-ன் 11வது படை பிரிவு அல்-கைத ஆதரவு போராளி அமைப்பான ஜபத்-அல்-நுஸ்ராவில் சேர்ந்தது.இது Free Syrian Army(FSA)க்கு பெரும் பின்னடைவாக பார்க்க படுகிறது. ஜபத்-அல்-நுஸ்ராசிரியாவில் மட்டும் அல்லாமல் இராக்,எமன் போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஷரியா ஆட்சியை நிலைநாட்ட போராடிவருகிறது.
அல்லாஹ் அந்த அமைப்புக்கு வெற்றியை நல்குவானாக.........ஆமீன்.  

சிரியாவில் யுத்த முனையில் துப்பாக்கி வீர சகோதரிகள் !!!!!!!!!!!


சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிப் படையில், ஆண்களுக்கு ஈடுகொடுத்து பெண்களும் களமுனைகளில் துப்பாக்கிகளுடன் இருப்பதை காணமுடியும். சிரியாவில் யுத்த முனைகளில் பெண்கள் யுத்தம் புரியும் இடங்களில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் தொகுத்து தந்துள்ளோம்.
1-வது போட்டோவில், சிரியா, அலீபோ ஹேக் பள்ளிவாசல் பகுதியில், பாபுலர் புரொட்டெக்ஷன் யூனிட் இயக்கத்தை சேர்ந்த பெண்கள், அந்த இயக்கத்தின் YPG இலச்சனை பொறித்த மேலாடைகளுடன் யுத்தம் புரிய தயாராக உள்ளதை காணலாம்.
2-வது போட்டோவில் துப்பாக்கியை கழட்டிப் பூட்டும் பெண்ணின் பெயர், உம் ஜபார். இவர் ‘ஃபிரீ சிரியா ராணுவம்’ போராளி அமைப்பை சேர்ந்தவர். அருகே இருப்பவர், இவரது கணவர் அபு ஜபார். போராளி அமைப்பின் சவுட் அல்-ஹக் (அர்த்தம் – உரிமைக்குரல்) பட்டாலியன் படைப்பிரிவின் தளபதி. 3-வது போட்டோவில் இந்த தம்பதியின் குழந்தை ஃபாதென். அலீபோவில் உள்ள இவர்களது இல்லத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இவை.
4-வது போட்டோவில் களமுனையில் துப்பாக்கியை தூக்கியபடி செல்லும் பெண்ணின் பெயர், குவாரா. சிரியாவைச் சேர்ந்த பாலஸ்தீன பெண்ணாக குவாரா, போராளிக் குழுவில் இணையும் முன், மேல்நிலைப் பள்ளி ஒன்றின் டைரக்டராக இருந்தவர்.
இவர் ஒரு சினைப்பர் (தொலைவில் இருந்து குறிபார்த்து சுடுவதில் வல்லவர்). மறைவிடம் ஒன்றில் இருந்தபடி குவாரா, துப்பாக்கியால் சிரியா ராணுவத்தை குறிபார்ப்பதை 5-வது போட்டோவிலும், போர் முனையில் அவரது நடவடிக்கைகளை 9-வது போட்டோவரை பாருங்கள்.
அடுத்த போட்டோவில், ‘மதர் ஆயிஷா’ படைப்பிரிவில் ஆயுதப் பயிற்சி பெறும், பெயர் வெளியிடப்படாத பெண். அலீபோவில் புதிதாக படையில் இணைந்த இந்தப் பெண்ணுக்கு, துப்பாக்கியை சரியாக பிடிப்பது எப்படி என்று பயிற்சி கொடுக்கப்படுவதை 10-வது, 11-வது போட்டோக்களில் பாருங்கள்.
12-வது போட்டோவில், ஆயிஷா படைப்பிரிவில் புதிதாக பயிற்சி பெறும் பெண்கள், பயிற்சிக்கு நடுவே ஓய்வு நேரத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சி.  13-வது போட்டோவில் மறைவிடங்களில் இருந்து சுடுவதற்கு பயிற்சி பெறும் பெண்கள்.
14-வது போட்டோவில் அலீபோ சலாஹிதீன் மாவட்டத்தில் உள்ள நகரம் ஒன்றின் வீதியில், கைகளில் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருக்கும் பெண்கள்.
15-வது போட்டோ எப்படி? ஒரு ஆளை உடனடியாக கொல்லவேண்டும் என்றால், தலையில் எந்த இடத்தில் குறி பார்த்துச் சுட வேண்டும் என்று இந்தப் பெண்களுக்கு பயிற்சியாளர் சுட்டிக் காட்டுவதை பாருங்கள்! அதைப் பார்க்கும் பெண்ணின் கைவிரல்களை கவனியுங்கள்!
17-வது போட்டோவில், அலீபோவில் உள்ள செக்பாயின்ட் ஒன்றில், துப்பாக்கி சகிதம் வாகனங்களை மறிக்கும் பெண்ணைப் பாருங்கள். இந்தப் பெண், அல்-இக்ஹால்ஸ் (அர்த்தம் – விசுவாசம்) படைப்பிரிவில் பயிற்சி பெற்றவர். 18-வது போட்டோவில், அதே படைப்பிரிவைச் சேர்ந்த பெண்கள், ஆயுதங்களுடன் ஓய்வு எடுக்கும் காட்சி.
19-வது போட்டோவில், துப்பாக்கிகளை கழட்டி, மீண்டும் பொருத்தும் பயிற்சியில் ஈடுபடும் அல்-முஸ்தாபா படைப்பிரிவு பெண்கள்.
20-வது போட்டோவை பாருங்கள். இந்தப் பெண் வானத்தைப் பார்த்தபடி இயக்கும் ஆயுதம் என்ன என்று அடையாளம் தெரிகிறதா? ஆம். விமான எதிர்ப்பு கருவி (anti-aircraft weapon) சிரியாவில், பெண்களின் கைகளால் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன… ஹம்மா!
போட்டோக்கள்  கீழேயுள்ளது.
Syria's-female-rebel-20130920-01
Syria's-female-rebel-20130920-02


Syria's-female-rebel-20130920-03

Syria's-female-rebel-20130920-04
Syria's-female-rebel-20130920-05

Syria's-female-rebel-20130920-06

Syria's-female-rebel-20130920-07
Syria's-female-rebel-20130920-08
Syria's-female-rebel-20130920-09
Syria's-female-rebel-20130920-10

Syria's-female-rebel-20130920-11

Syria's-female-rebel-20130920-12

Syria's-female-rebel-20130920-13
Syria's-female-rebel-20130920-14

Syria's-female-rebel-20130920-15
Syria's-female-rebel-20130920-16
Syria's-female-rebel-20130920-17
Syria's-female-rebel-20130920-18
Syria's-female-rebel-20130920-19

Syria's-female-rebel-20130920-20
Syria's-female-rebel-20130920-21
Syria's-female-rebel-20130920-22
Syria's-female-rebel-20130920-23
Syria's-female-rebel-20130920-24