Facebook Twitter RSS
*/

Latest News

சிரியா' நிலவரங்கள் சொல்லும் செய்தி .

சிரியா' யுத்தம் பல ஆச்சரியமான களச் செய்திகளை எமக்கு தருகின்றது . அந்த வகையில் புதிய செய்தியாக கிடைத்திருப்பதுசிரிய , ஈராக்கிய எல்லையில் ஈராக்கிய இராணுவம் சிரியப் போராளிகளுடன் கடுமையாக போரிட்டுள்ளது எனும் தகவல் ஆகும் .
நிகழ்வுகளின் கோர்வைகள் ஒரு குழப்பமான அரசியலை காட்டி நின்றாலும் நிதானமாக சிந்தித்து ஒரு தூய போராட்டத்தை புரிந்து கொள்ளும் அவசியம் முஸ்லீம்களுக்குஇருக்கின்றது .

பசர் அல் அசாத் சார் அரசு அதன் பலம் மற்றும் ஆதரவுத் தளம் மற்றும் 74 % மான சுன்னி முஸ்லீம்கள் வெறும் 17% மான அலவி ஷியா ஆதிக்கத்தின் கீழ் பற்பல கொடுமைகளின் கீழ் வாழ்ந்த கடந்த வரலாறு இப்படி பல்வேறு விடயங்களை அலசும் போது நிகழ்கால போராட்டத்தின் தோற்றப்பாடு எதேச்சையாகவோ ,திடீரெனவோ தோன்றிய ஒன்றல்ல எனும் முடிவுக்கு எம்மால் வரமுடியும் .

ஆனால் நிகழ்கால போராட்டத்தின் தொடக்க வரிகளை வைத்து போராட்ட வடிவத்தை ஒரு 'அமெரிகன் ஜிஹாத் ' ஆக குறித்துக் கட்டுவதிலும் ,பிரச்சாரப் படுத்துவதிலும் பசர் அசாத் சார் ஊடகங்களும் , மேற்கின் மீடியாக்களும் அதன் மத்திய கிழக்கு ஆதரவாளர்களும் இரு வேறுபட்ட பாணிகளில் ஒரே பணியையே செய்தனர் .

அரேபிய வசந்தம் என்பது ஒரு நவ காலனித்துவ கொடும்பிடியின் சாந்தமான ஒரு ஆதிக்க வடிவம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .இங்கு இயல்பான மக்கள் எழுச்சியையும் ,அதன் எதிர்பார்ப்பையும் எவ்வாறு கையாழ்வது என்பதில்தான் மேற்கின் புதிய திட்டங்கள் மத்திய கிழக்கில் அமுல் படுத்தப்பட்டன.

முஸ்லீம் நாடுகளில் புதிய அரசியல் முகங்கள் தொடர்பில் 1. இஸ்ரேல் ,மற்றும் மேற்குலகு தொடர்பான நலன்பாதுகாக்கப்படல் . 2. இவர்கள் தொடர்பான முஸ்லீம்களின் நம்பிக்கையீனம் களையப்படுவது என்பன பிரதானமானது . அந்த வகையில் மாற்றீடுகள் களம் இறக்கப் பட்டனர் . 'நேற்றைய எதிரியை விலைபேசி இன்றைய நண்பனாக்கிக் கொண்டால் நாளைய சவால்களை செலவின்றி தடுக்கலாம் '. எனும் இராஜதந்திரப் பொறி வழமையான 'ஜனநாயக சாயத்தோடு 'வைக்கப்பட்டது. தேவைக்கும் தேசியத்துக்கும்ஏற்றால் போல 'இஸ்லாமியம்' எனும் இன்னொரு வண்ணத்தாலும் முஸ்லீம்கள் மனம் குளிர வைக்கப் பட்டனர் .

மதச் சார்பின்மையை நேற்று கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று காலத்தின் கட்டாயம் , அல்லது படிமுறை மாற்றம் என்ற நியாயங்களோடு அதன் காவலர்களாக பணியமர்த்தப் பட்டனர் . அடுக்கடுக்காக இந்தப் பொறியில் வீழ்ந்த முஸ்லீம் தேசங்களின்
வரிசையில் சிரியாவும் விழும் என்ற நம்பிக்கையில் காரியங்கள் ஒழுங்கு படுத்தப் பட்டன .ஆனால் நடப்பு நிகழ்வுகள் இப்படியான ஒரு மேற்கு எதிர்பார்த்த சாதகத்தை குறிகாட்டி நிற்கவில்லை .

நடப்பு அரசியலில் 'இஸ்லாமிய ஷரீயா 'முதலிடம் ,அல்லது தலைமை மாற்றம் , பற்றி சிரிய மக்கள் எழுச்சியின் நகர்வுகள் பேசியிருந்தால் . 'கடாபியை' போலஒரு அகால முடிவை நோக்கி NATO உதவியோடு கூடிய இராணுவ அரசியல் அல்லது 'ஹுஸ்னி முபாரக் ' சந்தித்த நீதிமன்ற அரசியல் போன்ற போலி முகங்கள் 'பசர் அல் அசாத்' விடயத்தில் இந்நேரம் அமுலாகி இருக்கலாம் .

ஆனால் சிரிய மக்களின் தேடல்கள் மிக ஆழமானதும் , இஸ்ரேல் மற்றும் மேற்கின் சித்தாந்த அரசியலுடன் முற்றிலுமாக மோதக் கூடியதும் ,இஸ்லாமிய வாழ்வியலை முற்றாக அமுல் நடத்தக் கூடிய துமான 'இஸ்லாமிய கிலாபா' அரசை வேண்டுவதே நிலமை வருடக்கணக்காக அழிவுகளோடு தொடர்வதற்கான காரணமாகும் .

செய்திகளின் இருட்டடிப்பு , மக்கள் படுகொலைகள் , சதி இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் , இப்போது அந்த வரிசையில்' ஷியா சார் அமெரிக்க உருவாக்கமான ஈராக்கிய இராணுவத்தின் தாக்குதல்கள்! இறப்புக்களால் ,இழப்புக்களால் தூய இலட்சியவாதம் தோற்கடிக்கப் பட முடியாதது . இறைவன் முன்னறிவித்த சக்தி மிக்க இஸ்லாத்தின் மீள்வருகையை சாத்தானிய சக்திகளால் தடுக்கவும் முடியாது.

அல்-துர்ராவின் கொடிய மரணத்துக்கும் தமது ராணுவத்திற்கு பங்கில்லை என்று இஸ்ரேல் அறிக்கை....


மிகவும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உலகம் முழுவதும் ஏற்படுத்திய ஃபலஸ்தீன சிறுவன் அல் துர்ராவின் கொலைச் சம்பவத்தில், தமது ராணுவத்திற்கு பங்கில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது.
பிரெஞ்சு தொலைக்காட்சி அலைவரிசையான பிரான்சு-2 வெளியிட்ட தகவல் அடிப்படையற்றது என்று இஸ்ரேல் நியமித்த விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபலஸ்தீனின் 12 வயது சிறுவனான முஹம்மது அல் துர்ராவை அவரது தந்தை ஜமால், தனது பின்னால் மறைத்து வைத்த பிறகும் இஸ்ரேலின் கொடிய ராணுவம் துர்ராவை சுட்டுக் கொல்லும் கோரமான காட்சியின் வீடியோவை பிரான்சு நாட்டு சானல் ஒளிபரப்பியது.
தனது அருமை மகனை காப்பாற்றுவதற்கான தந்தை ஜமாலின் நீண்ட போராட்டம் வீணானது. பின்னர் அல் துர்ராவின் உடலை கொண்டுவருவதும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது. ஜமாலுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை உலக அளவில் இச்சம்பவம் ஏற்படுத்தியது. மேலும் ஃபலஸ்தீனில் போராட்டம் வலுப்பெறவும் இச்சம்பவம் காரணமானது. பல்வேறு நிர்பந்தங்களின் காரணமாக இச்சம்பவத்திற்காக இஸ்ரேல் மன்னிப்புக் கோரியது. அல் துர்ராவின் மரணத்திற்கு ஃபலஸ்தீன் போராளிக் குழுக்கள் தாம் காரணம் என்று பொய்யைக் கூறியது இஸ்ரேல். எதிர்ப்பு வலுப்பெறுவதை கவனத்தில் கொண்டு விசாரணைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டது.
ஃபலஸ்தீன் போராளிகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும், இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்புணர்வை அதிகரிக்கவுமே பிரான்சு நாட்டு தொலைக்காட்சி சானலின் செய்தி அறிக்கை உதவியது என்று இஸ்ரேல் விசாரணைக் குழு குற்றம்
சாட்டுகிறது. ஆனால், விசாரணை அறிக்கை இஸ்ரேலின் உருவாக்கம் என்று முஹம்மது அல் துர்ராவின் தந்தை ஜமால் அல் துரா கூறியுள்ளார்.
தனக்கும், மகனுக்கும் என்ன நேர்ந்தது? என்பதை அறிய அரபு பிரதிநிதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணைதான் தேவை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜமால் கூறியுள்ளார்.
தங்களின் செய்தி அறிக்கையில் ஒரு தவறும் இல்லை என்றும், எந்த சுதந்திர ஏஜன்சிகள் விசாரணை நடத்தினாலும் தாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என்றும் பிரான்சு தொலைக்காட்சி சானல் தெரிவித்துள்ளது.
எனக்கு இந்தியாவில் அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை : ஜூலியன் அசாஞ்ச்!
 

 
 



அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லுனர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்
தெரிவித்துள்ளார். இரகசிய சைபர் நெட்வேர்க்கை பயன்படுத்தி அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தொலைபேசி மற்றும் இணையப்பாவணை தொடர்பில் பல லட்சக்கணக்கில் பிரத்தியேக தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை...
திரட்டி வைத்திருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வார்ட் ஸ்னோவ்டென். இவர் முன்னர் அமெரிக்காவின் இரகசிய பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர் ஆவார். தற்சமயம் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் கோரி வருகிறார். சுவிற்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் தைரியமாக முன்வந்து வெளிப்படுத்திய தகவல்களினால், இந்தியர்களின் சைபர் நெட்வேர்க்குகள் மீது அமெரிக்கா குறிவைத்திருந்த விடயம் தெரியவந்துள்ளது. இவருக்கு நிச்சயம் இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஜூலியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ஆபத்து நேர்ந்த போது முதன்முறையாக இந்தியாவிலேயே அகதிகள் தஞ்சம் கோரியிருந்ததாகவும், எனினும் மனிதாபிமானத்தை, மனித உரிமைகளை மதிக்கும் நாடாக கருதப்படும் இந்தியா தனது கோரிக்கைக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். 'விக்கிலீக்ஸின் மிகப்பெரிய ஆதரவாளர்களாக இந்தியா இருந்தது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொண்டேன். அவர்களுகு பல முறை கோரிக்கை விடுத்திருந்தேன். எனினும் எனக்கு புதுடெல்லி பதில் அளிக்க மறுத்துவிட்டது' என்கிறார் ஜூலியன் அசாஞ்சே.

அவர் கடந்த வருடன் ஜூன் 19ம் திகதியிலிருந்து இங்கிலாந்தில் உள்ள எகுவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். எகுவடோர் போன்ற மிகச்சிறிய நாடுகளே அகதி அந்தஸ்து அளிக்க முன்வந்துவிட்டன. ஆனால் சர்வதேச வல்லமையுடன், பில்லியனுக்கு மேற்பட்ட சனத்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடு, மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வராதது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனக்கில்லையென்றாலும், ஸ்னோவ்டெனுக்காவது இந்தியா அகதி அந்தஸ்து அளிக்க வேண்டும்.

மனிதாபிமானத்திற்கு ஆதரவாக இந்தியா துணைநிற்க வேண்டிய தருணம் இது என அசாஞ்ச் கூறியுள்ளார். மேலும் இந்தியா தனக்கு அகதி அந்தஸ்து அளிக்க இப்போது முன்வந்தாலும் தான் அங்கு வருவதற்கு தயாராக இருப்பதாகவும், இதுவரை ஒரு நாளும் இந்தியாவுக்கு வந்ததில்லை. எனினும் அங்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸிற்கு மிகப்பெரும் ஆதரவு தமக்கு இந்தியாவில் இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். 
 ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: ஈரான் அதிபர் தேர்தலில் ரோவ்ஹானி முன்னணி
  

 
 

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: ஈரான் அதிபர் தேர்தலில் ரோவ்ஹானி முன்னணி

ஈரான் அதிபராக இருக்கும் முகமது அகமதிநிஜாத் பதவி காலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து நேற்று புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில், ரோவ்ஹானி, தெக்ரான் மேயர் முகமது பகர் குவாலிபாப், முகமது ஜலிலி உள்பட 6 பேர் போட்டியிட்டனர். நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் சுமார் 5 கோடி பேர் ஓட்டு போட்டனர்.
தெக்ரான் மற்றும் சில நகரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. எனவே, அங்கு வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதே போன்று, வெளி நாடுகளில் வாழும் ஈரானியர்களின் வாக்குகள், நாடோடிகள் உள்ளிட்டோர் பதிவு செய்த ஓட்டு எண்ணிக்கையும் தாமதமாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஹசன் ரோவ்ஹானி முன்னணியில் இருந்தார். 8 லட்சத்து 61 ஆயிரத்து 866 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இவர் 4 லட்சத்து ஒரு ஆயிரம் ஓட்டுகள் பெற்று இருந்தார். இதன் மூலம் அவர் 46.6 சதவீதம் வாக்குகள் பெற்று இருந்தார். இவருக்கு அடுத்த படியாக குவாலிபாப் 14.6 சதவீதம் அதாவது 1 லட்சத்து 27 ஆயிரம் வாக்குகளும், முகமது ஜலிலி 1 லட்சத்து 19 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இவர்கள் தவிர மற்ற 3 வேட்பாளர்களும் மிக குறைந்த ஓட்டுகளே பெற்றுள்ளனர்.
இந்த தகவலை ஈரான் உள்துறை மந்திரி முஸ்தபா மொகமது நள்ளார் தெரிவித்தார். தற்போது முன்னிலை பெற்றுள்ள ஹசன் ரோவ் ஹானி ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். அணு ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

மாலேகான் குற்றப்பத்திரிகையில் இந்து பயங்கரவாதிகள் !

டந்த வாரம் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு பேர் மீதும் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மகாராஷ்ட்ரா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் இந்த நான்கு மதவெறியர்களின் குண்டு வைப்புச் சதிச்செயல்களும் அவர்களின் தொடர்புகளும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் பிரக்யாசிங் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.
மாலேகான் குண்டுவெடிப்பு இடம்.
மாலேகான் குண்டு வெடிப்புகள் 2006 : படா கப்ரிஸ்தான் மசூதிக்கு வெளியில்.
2006-ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் சரியாக தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது ஒரு குண்டு. சிதறித் தெரித்த சில்லுகளுடன் மேலே எழும்பிய புகைப்படலம் களைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்துச் சிதறின. பிய்த்தெறியப்பட்ட சதைத் துணுக்குகளால் அந்த இடமே இரத்தகளரியானது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
இது மாலேகானில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல். இதற்கு அடுத்த பயங்கரவாத தாக்குதல் 2008 ஆம் ஆண்டின் ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்டது. டிபன் பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட வெடிகுண்டுகள் மாலேகானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை தான், மதிய தொழுகை முடியும் நேரத்தில் தான் இந்த குண்டுகளும் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக கடமையில் இறங்கிய காவல்துறை இதற்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் தான் காரணம் என்று வெற்றிலையில் மை போட்டு பார்த்ததைப் போல அடித்துக் கூறியது. இவர்கள் தான் குண்டு வைத்தனர் இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி ஒன்பது அப்பாவி முஸ்லீம்களை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆனால் அவர்கள் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 2012 இல் விடுவிக்கப்பட்டனர். அதாவது, தவறே செய்யாமல் பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்
பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்.
இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் உடனே இந்து பொதுப்புத்தியில் தாடி, குல்லா வைத்த முஸ்லீம் முகங்கள் தான் தோன்றும். அந்த அளவுக்கு இசுலாமியர்களைப் பற்றிய இந்து பெரும்பாண்மையின் கண்ணோட்டம் ஆர்.எஸ்.எஸ் காவிக் கண்ணோட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த கண்ணோட்டத்தை வடிவமைப்பதிலும், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் ஜனநாயகத் தூண்கள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குண்டு வெடிப்புகள் நடக்கும் போதெல்லாம் அநீதியான முறையிலும் ஒருதலை பட்சமாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுக்கருத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும் கருத்துக் கருவிகளாகவே இந்த ஜனநாயகத் தூண்கள் செயல்படுகின்றன.
பயம், பீதி, பதட்டம் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இத்தகைய தருணங்களில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தம் பங்கிற்கு தமது சொந்த கற்பனைகளையும், பொய்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வாசகர்களிடம் அள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளுக்கு போட்டியாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்குகின்றன. வெளியில் ஜனநாயக வேடமும் மூளைக்குள் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் புத்தியையும் வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை தீவிரவாதம், பயங்கரவாதம் என்று ஊளையிடும் இந்த அகிம்சாவாதிகள் எல்லாம் இந்து தீவிரவாதிகள், இந்து பயங்கரவாதிகளின் குண்டுவைப்புகளை பற்றி வாய் திறப்பதே இல்லை.
மாலேகான் தாக்குதலுக்கு முன்பும் இதே பாணியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், பார்பானி நகரில் உள்ள ரஹ்மத் நகர் மகமதியா மசூதியில் ஒரு தாக்குதலும், 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், புர்ணா நகரின் சித்தார்த் நகரில் உள்ள மிராஜ் உல் உலூரம் மதறாசா மற்றும் மசூதியிலும் இதே போன்ற வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா மசூதியிலும் குண்டுகள் வெடித்தன. 2006-ம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளும் இதே பாணியில் வெள்ளிக்கிழமை, மதிய நேரங்களில் தான் நடத்தப்பட்டன.
அசிமானந்தா சொருகிய ஆப்பு
ஆனால், அடுத்த குண்டு மசூதியில் வெடிக்கவில்லை. ஒரு வீட்டிற்குள் வெடித்தது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் தரோடாவைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டிற்குள் இருந்து வெடித்துச் சிதறியது. பயங்கரவாத தாக்குதல்களுக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதே அந்த குண்டுகள் வெடித்துச் சிதறிவிட்டன. இந்த வெடி விபத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த இருவர் அதே இடத்தில் இறந்தனர், ஐந்து பேர் படுகாயத்துடன் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுகள் ஒளரங்காபாத் மசூதியை தாக்குவதற்காக தயாரிக்கப்பட்டவை என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. அப்போது தான் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வைப்பு சதி வேலைகள் ஓரளவுக்கு வெளியே தெரிந்தன. இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் தேசபக்த ஒப்பாரியும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி விதம்விதமான திரைக்கதைகளையும் எழுதுகின்ற பத்திரிகைகள் எல்லாம் அப்போது கேடுகெட்ட முறையில் உண்மைகளை மூடி மறைக்கவே முயற்சித்தன.
அதன் பிறகு குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். மாலேகானில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டு வெடிப்பு தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் பெண் சாமியார் பிரக்யா சிங்கும், இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் மேஜர் ஜெனரல் தகுதியில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்கள் தான் இந்து பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பயிற்சியளித்துள்ளனர். இவர்களைத் தவிர மற்றொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவர் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வைப்புகளுக்கு இந்திய இராணுவத்திலிருந்து வெடி மருந்துகளை கொண்டுவந்து கொடுத்த தேசபக்தர் இவர் தான். இந்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவைப்புகளில் எல்லாம் இவனுடைய பங்கு மிகவும் முக்கியமானது.
பிரக்யா உள்ளிட்டோரின் கைதைத் தொடர்ந்து அதே ஆண்டில் உ.பி மாநிலம் கான்பூரில் வைத்து தயானந்த் பாண்டே என்கிற சாமியார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் 2010-ம் ஆண்டு அசிமானந்தா என்கிற ஆர்.எஸ்.எஸ் சின் முழு நேர ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது தான் இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இவர் தான் குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகளைப் பற்றிய பல உண்மைகளை முதன்முதலில் வாக்குமூலமாக அளித்தவர். அவருடைய வாக்குமூலத்தில் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வைப்பில் மட்டுமல்ல, 2006 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ்க்கு சொருகப்பட்ட கூர்மையான ஆப்பாக அமைந்தது.
வாயை திறப்பதற்குள் மூச்சை நிறுத்திய ஆர்.எஸ்.எஸ்
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு
இந்துமதவெறிக் கும்பல் மசூதிகளை அடுத்து இரயில்களுக்கும் குண்டு வைக்கத் திட்டமிட்டது. அந்த திட்டத்தின் முதல் முயற்சியாக, 2007 ஆம் ஆண்டு டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவன் சுனில் ஜோஷி என்கிற ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியன். மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா உள்ளிட்ட அனைத்து குண்டுவெடிப்புகளிலும் மிகப்பெரியதொரு வலைப்பின்னல் செயல்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்கள் அனைத்திலும் பிரக்யாசிங், ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், அசிமானந்தா, சுனில் ஜோஷி போன்ற கீழ்மட்ட தலைகளில் இருந்து பல உயர்மட்ட தலைகள் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதை சுனில் ஜோஷியின் கொலை அம்பலப்படுத்தியது.
குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்துமதவெறியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதாலும், ஏற்கெனவே கைதானவர்கள் பல உண்மைகளை கக்கிக்கொண்டிருந்ததாலும், சம்ஜவ்தா குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷி கைது செய்யப்பட்டால் அவனும் வாக்குமூலத்தில் பல உண்மைகளை கக்கக்கூடும் என்கிற அபாயம் இருந்தது. அவனுக்கு இந்த சதிச் செயலின் மொத்த வலைப்பின்னலும் தெரிந்திருந்தது, யார், யார் பெரிய தலைகள், அவர்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் கைதானால் பல முக்கிய தலைகளே உருளும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாதிகளே சுனில் ஜோஷியை 2007-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் தேவாசில் வைத்து போட்டுத் தள்ளிவிட்டனர். அசிமானந்தா இதையும் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் சுனில் ஜோஷியை கொன்றது பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தான் என்கிற உண்மையும் தெரியவந்தது. இந்த கொலைக்காகவும் பிரக்யா சிங் மீது ஒரு வழக்கு போடப்பட்டது.
நீதிமன்றத்தின் காவிப்பாசம்
பிரக்யா தாக்கூர்
போலீஸ் காவலில் பிரக்யா தாக்கூர்
குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்துத்துவ பயங்கரவாதிகள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இரண்டாவதாக நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பங்காற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தலிக் என்பவன் 2011 ஆம் ஆண்டில் இறுதியாக கைது செய்யப்பட்டான். இவனையும் சேர்த்து இதுவரை பனிரெண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் பல்வேறு குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே என்கிற இரண்டு பேர் இதுவரை பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் வனவாச வாழ்வு முடிந்து வெளியே வருவதோடு அடுத்த முறை பிரதமர் வேட்பாளர்களாகவும் கூட நிறுத்தப்படலாம். சும்மாவா, தியாகம் அல்லவா செய்திருக்கிறார்கள்.
மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட பதினோரு பேர் மீதும் ”மகாராஷ்ட்ரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் ஒரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். இது கடுமையான சட்டப் பிரிவுகளை கொண்டது. இந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை நாசிக் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து ஆண்டுக்கணக்கில் உள்ளே தள்ளுவதில் மகிழ்ச்சி கொள்ளும் நீதி மன்றம், பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளை இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறியதோடு அதை ரத்து செய்து, சாதாரண கோர்ட்டில் நடக்கும் சாதாரண வழக்கைப் போல இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை (அயோக்கியத்தனத்தை) கேட்டதும் பிரக்யாசிங்கின் தந்தைக்கு தலைகால் புரியவில்லை, தனது குடும்பத்தோடு நண்பர்கள் உறவினர்களுக்கு எல்லாம் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.
வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு குழுவிடம் மாற்றம்
இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் படை விசாரித்து வந்தது. அது தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியும், வேறு சில இஸ்லாமிய அமைப்புகளும் தான் இந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று கூறி ஒன்பது அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து உள்ளே தள்ளியதோடு வழக்கையும் அத்துடன் ஊத்தி மூடப்பார்த்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு இந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்பு வழக்குகளையும் தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து தேசிய புலனாய்வு குழுவிடம் 2011-ம் ஆண்டு ஒப்படைத்தது.
ராஜேஷ் தவாடே, குல்கர்னி
குண்டு வைப்பில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த ராஜேஷ் தவாடேயும் குல்கர்னியும்.
தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கிய பிறகு தான் ஓரளவுக்காவது உண்மைகள் வெளிவரத் துவங்கின. எனினும் வலதுசாரி கண்ணோட்டமுள்ள இந்திய ஊடகங்கள் முடிந்த அளவுக்கு தமக்கு விருப்பமற்ற இந்த உண்மைகளை மூடி மறைக்கவே பார்த்தன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு இந்து அமைப்புகள் தான் காரணம் என்பதை தேசிய புலனாய்வுக் குழு ஆதாரங்கள், சாட்சிகளுடன் தனது அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பை 28.12.2012 அன்று வெளியிட்டது. அதன் பிறகு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருந்த இந்து தீவிரவாதிகள் மீதான பிடி இறுக்கமடைந்தது.
இந்நிலையில் இம்மாதம் 23-ம் தேதி இவ்வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மாலேகான் குண்டுவைப்பில் லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை தெளிவுபடுத்தும் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடந்துவருவதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்ஜி மற்றும் டாங்கேயின் தலைக்கு ரூ.10 லட்சம்மும், அமித் சவுகானின் தலைக்கு ஐந்து லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் முக்கிய குற்றவாளிகளான புரோஹித், அசிமானந்தா, ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் பெயர்கள் இக்குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. ஒரு வேளை இவர்களை தப்பிக்க வைப்பதற்குத்தான் இந்தக் குற்றப்பத்திரிகையா என்றும் தெரியவில்லை. இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, துணை குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நீதி நீதி மன்றத்தில் கிடைக்குமா ?
நாளையே மோடி ஆதரவாளர்களின் விருப்பப்படி பாசிச மோடி பிரதமரானால், இந்த குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பயங்கரவாதிகளும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எந்த குற்றமும் செய்யாத அப்சல் குரு போன்ற அப்பாவிகளின் உயிரை குடித்து தனது வெறியை தீர்த்துக்கொண்ட பாசிச நீதிமன்றங்கள் செயல்படும் இந்தியாவில் இந்துமதவெறியர்களுக்கு எதிராக வழக்கும் விசாரணையும் நடப்பதே பெரிய விஷயம் தான். அந்த வகையில் தேசிய புலனாய்வுக் குழு இந்துவெறியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே நேரத்தில் விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டாலும், குற்றப்பத்திரிகை குற்றவாளிகளை சரியாக அடையாளம் காட்டினாலும் இந்திய நீதிமன்றங்கள் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. நீதிமன்றங்களை மட்டுமே நம்பி இராமல் அதற்கு வெளியில் கட்டியமைக்கப்படும் மக்கள் போராட்டங்களால் தான் இந்த பயங்கரவாதிகளை தண்டிக்க முடியும்.
- வையவன்

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா


ஈரான் அணுஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி, அதன் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது என்றாலும் பொருளாதாரத் தடையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா தற்போது விதித்துள்ளது. இதற்கான ஆவணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று கையெழுத்திட்டுள்ளார்.


இது வரை இல்லாத வகையில் ஈரானின் பணமதிப்பை குறிவைத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடம் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது இந்த தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் ஈரானின் பணமதிப்பில் கடும் சரிவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.


இது தவிர ஈரானின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் வாகன உற்பத்திதுறையை குறிவைத்து மற்றொரு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களை வேறு நிறுவனங்கள் ஈரானிடம் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.


ஈரானில் இந்த மாதம் 14-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அமெரிக்கா இந்த புதிய தடைகள் விதித்திருப்பது ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

பேஸ்புக்கில் ஆபாச படங்கள்; சர்ச்சையில் சிக்கிய இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள்!


 சமூகவலையமைப்புகளில் சர்ச்சையில் சிக்குவது இஸ்ரேலிய இராணுவத்துக்கு வாடிக்கையாக போய்விட்டது. ஏனெனில் இவற்றால் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக பல எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது இஸ்ரேலிய இராணுவம்.
ஒரு பிரச்சினை அடங்கி அதன் சூடு தணிவதற்குள் மற்றைய சர்ச்சை பூதாகரமாக உருவெடுத்து விடுகின்றது.  அதேபோல் ஒரு சம்பவம் தற்போதும் இடம்பெற்றுள்ளது.
ஆம் துப்பாகிகளுடன் உள்ளாடைகள் மட்டும் அணிந்தவாறும், அரைகுறை ஆடையுடனும் படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் வெளியிட்ட இஸ்ரேல் இராணுவ வீராங்கனைகள் சிலரே இச்சர்ச்சைக்கு காரணமாகும்.


இஸ்ரால் நாட்டு செய்தி இணையத்தளமான ‘வாலா’ இப்படங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பெண்கள் இராணுவத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் என்பதுடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள படைத்தளமொன்றைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் அனைவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய படங்கள், காணொளிகளை பகிர்வது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு யுடியூப்பில் இஸ்ரேலிய இராணுவ வீரர் எனக் கூறப்படும் நபரொருவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள பலஸ்தீன பெண்ணொருவரை சுற்றி நடமாடும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பலஸ்தீன சிறைக் கைதியொருவருக்கு அருகில் இருந்தவாறு இஸ்ரேலிய இராணுவ வீராங்கனையொருவர் போஸ் கொடுக்கும் படமொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் இவ்வருட ஆரம்பத்தில் பலஸ்தீனத்துக்கு எதிரான கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திருந்தார் இஸ்ரேலிய இராணுவ வீரரொருவர். மேலும் அவரே துப்பாக்கியுடன் நிர்வாண படங்களை வெளியிட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தார். இத்தகைய விடயங்களைக் கருத்தில் கொண்டு முகாமில் சேவையிலிருக்கும் காலப்பகுதியில் சமூக வலையமைப்புகளை தனது இராணுவ வீர, வீராங்கனைகள் உபயோகிக்க இஸ்ரேல் தடை விதித்திருந்தது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள படங்கள் அத் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதா என்பது தொடர்பில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் சமூகவலையமைப்புகளில் எவற்றை பகிரவேண்டும் என்பது தொடர்பில் வரைமுறைகள் எதையேனும் இஸ்ரேல் விதித்துள்ளதாக என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
எனினும் தற்போது வெளியாகியுள்ள படங்கள் நிச்சயமாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.